Sunday, May 16, 2010

உன் எண்ணங்களே உன்னை உருவாக்குகின்றன

"பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே
இருக்குமிடம் எதுவோ, நினைக்குமிடம் பெரிது
போய்வரும் உயரமும் புது புது உலகமும் அவரவர் உள்ளங்களே
நெஞ்சினில் துணிவிருந்தால் நிலவுக்கும் பொய் வரலாம்"
இது 'சாந்தி நிலையம்' என்ற படத்திலிருந்து ஒரு பாடல். கவிஞர் கண்ணதாசன் எழுதியது என்று ஞாபகம்.
(என்னடா! அடிக்கடி பழைய சினிமா பாடல்களையே மேற்கோள் காட்டிக்கொண்டிருகின்றானே என்று நீங்கள் நினைக்கிறீர்கள், சரிதானா!!)
என்ன செய்வது! பல பழைய பாடல்களிருந்து வாழ்க்கைக்கு தேவையான பல உண்மைகளை நாம் கற்றுக் கொள்ளலாம்.
"TAT TVAM ASI" என்று ஸ்ரீ ஆதி சங்கரர் கூறியிருக்கிறார். "அது நீயாகவே இருக்கிறது. அல்லது நீ அதாகவே இருக்கிறாய் " என்று இதற்கு பொருள் கொள்ளலாம். இந்த வாசகத்தை பலவிதமாக புரிந்துகொள்ளலாம்.
நீ எதாக இருக்க விரும்புகிறாயோ அதாகவே நீ ஆகிறாய். அதாவது, உன் எண்ணங்கள் எப்படி போகிறதோ அதாகவே நீ மாறுகிறாய். நினைக்கும் விதத்தை மாற்றினால் நடக்கும் விதத்தை மாற்றலாம்.
நமது எண்ணங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. இதைத்தான் கவிஞர் மேலே சொன்ன பாடலில் சொல்லியிருக்கிறார்.
நம்மை சுற்றி, நமது சரித்திரத்தில் நடப்பதை கொஞ்சம் கவனித்து பார்த்தால் இந்த உண்மை புரியும்.
ஒவ்வொரு கஷ்டமான நேரத்திலும் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை நாம் எப்படித் தீர்மானம் செய்கிறோமோ அதுதான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.
எனவே நமது எண்ணங்களை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அது நமது கையில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment