Monday, June 7, 2010

இயற்க்கை குணம்


சமீபத்தில் படித்த ஒரு கதை.

ஒரு பள்ளத்தின் அருகில் சாது ஒருவர் நின்றுகொண்டிருப்பதை ஒரு வழிப்போக்கன் பார்த்தான். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலோடு சாதுவின் அருகில் அவன் சென்றான். ஒரு கருந்தேள் அந்த பள்ளத்தை தாண்ட முயற்ச்சிப்பதை அந்த சாது ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அந்த கருந்தேள் பள்ளத்தை தாண்டும்பொழுது அங்கே தேங்கியிருந்த தண்ணீரிலும் சகதியிலும் மாட்டிகொண்டு மூழ்கியது. மிக கவனமாக ஒவ்வொரு முறையும் சகதியிலிருந்து சாது அதை வெளியே எடுத்துவிட்டார். அப்படி எடுத்துவிடும்பொழுது அந்த தேள் அவரை கொட்டியது. மீண்டும் தேள் சகதியில் இறங்கியது. சாது அதை எடுத்து விடுகிறார். தேள் மீண்டும் அவரை கொட்டுகிறது. இப்படியே மீண்டும் மீண்டும் தேள் சகதியில் மாட்டிக்கொள்ள, சாது அதை வெளியே எடுத்துவிட, தேள் அவரை கொட்ட, ....இது தொடர்ந்து கொண்டிருந்தது.


வழிப்போக்கனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆச்சரியத்துடன் சாதுவை நோக்கி கேட்டான், " ஐயா, தேள் கொட்டுகிறது என்பதை தெரிந்தும் மீண்டும் மீண்டும் அதை சகதியிலிருந்து எடுத்து விடுகிறீர்களே! தேள் கொட்டுவதில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளக்கூடாதா?" என்று.


சாது கூறினார்," இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. கொட்டுவது தேளின் இயற்க்கை குணம். உயிர்களை காப்பது என்னுடைய குணம் . "


நாம் ஏன் நமது இயற்க்கை குணத்தை பிரதிபலிக்காமல் வித்தியாசமாக இருக்கிறோம்? ஒருவரை ஒருவர் பாதுகாத்து காப்பாற்றாமல் மற்றவரை அழிப்பதிலேயே பொதுவாக நமது கவனத்தை செலுத்துகிறோம்? நாம் எங்கே போய் கொண்டிருக்கிறோம்? யோசித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment